அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதி பள்ளி மேலாண்மைக் குழு மறுக்கட்டமைப்புக் கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை).
வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுக்கட்டமைப்பு கூட்ட நிகழ்ச்சி (24-08-2024, சனிக்கிழமை) அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தலைமை ஆசிரியர் திரு. மு. முத்துக்குமார் தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்று அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு செய்து வரும் பணிகள் குறித்தும்பேசினார்.இதில் பள்ளி மேலாண்மை குழுக்களில் புதிதாக 24 உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உறுப்பினர்கள், பெற்றோர் உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சுய உதவிகுழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 24 உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் மேற்பார்வையாளராக இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, கோமாபுரம் அரும்பு, வீராசாமி, பன்னீர்செல்வம், ...